உள்ளூர் செய்திகள்

சப்தகன்னிகா பரமேஸ்வரி கோவில் பொங்கல் விழா

Published On 2022-06-05 10:33 GMT   |   Update On 2022-06-05 10:33 GMT
  • மதுரை தென்பரங்குன்றம் சப்தகன்னிகா பரமேஸ்வரி கோவில் பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் இன்று தொடங்கியது.
  • வருகிற 19-ந் தேதி மறு பொங்கல் விழா நடக்கிறது.

மதுரை

மதுரை தென்பரங்குன்றம் ஸ்ரீ சப்தகன்னிகா பரமேஸ்வரி கோவில் 55-வது பொங்கல் விழா இன்று (5-ந் தேதி) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதம் தொடங்கினர். மேலும் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி (திங்கள் கிழமை) அம்மனுக்கு பொங்கல் இடுதல், பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதனை தொடர்ந்து வருகிற 19-ந் தேதி மறு பொங்கல் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளைற ஸ்ரீசப்தகன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் பக்தர் சபையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News