உள்ளூர் செய்திகள்

ஆயுதங்களுடன் கைதான 4 பேர் 

கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது

Published On 2022-08-14 09:25 GMT   |   Update On 2022-08-14 09:25 GMT
  • கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார், தப்பி ஓடிய முகமது ரியாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், கே.புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் நேற்று மதுரை சம்பக்குளம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பொது கழிவறை அருகே 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் விரட்டி சென்று அதில் 4 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்த2 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் பாலகுமாரன் என்ற தவளை பாலா, லாரன்ஸ், சந்துரு என்ற கபாலி, தங்கபாண்டி என்பது தெரிய வந்தது.

இவர்கள் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொள்ளை அடிக்க பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்த கே.புதூர் போலீசார், தப்பி ஓடிய முகமது ரியாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News