உள்ளூர் செய்திகள்

முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-07-19 09:49 GMT   |   Update On 2022-07-19 09:49 GMT
  • முதியவர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
  • கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பட்டக்குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் டிரைவராக வேலை பார்க்கும் மேலக்குயில்குடி ரவீந்தர் என்பவர், நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.2 லட்சம் வாங்கினார்.

அவர் எனக்கு வாக்குறுதி கொடுத்தபடி, வேலை வாங்கி தரவில்லை. எனவே நான் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற ஊழியர் ரவீந்தரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சிவகங்கை மாவட்டம், திருபுவனம், டி.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). இவர் சிலைமான் போலீசில் கொடுத்து உள்ள புகார் மனுவில், சக்கிமங்கலம், சவுராஷ்டிரா காலனி மகேந்திரன் மனைவி கவிதா என்ற மனோன்மணி மற்றும் சிவசுப்பிரமணியன் ஆகிய 2 பேர், என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.2 லட்சம் பெற்றனர்.

ஆனால் அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நான் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டேன். அப்போது அவர்கள் ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்தனர். மீதம் உள்ள பணத்தை திருப்பி தர மறுத்து விட்டனர் என்று கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதா என்ற மனோன்மணி, சிவசுப்பிரமணியன் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News