உள்ளூர் செய்திகள்

விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டிய காட்சி.

வாழப்பாடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-12-14 10:09 GMT   |   Update On 2022-12-14 10:09 GMT
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
  • பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேஷ்குமார், மாநில அளவிலான கபடி போட்டியிலும், மாணவர் வெங்கடேஷ், மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்‌ பட்டுள்ளனர். இந்த இரு மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், நிர்வாகிகள் கோபிநாத், குணாளன், ரமணி, தில்லையம்பலம், ஆசிரியர் முனிரத்தினம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் கொடுத்து வரும் ஊக்கத்தினால், தொடர்ந்து முறையாக பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அளவில் சாதனை படைப்போம் என, மாணவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News