உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் தற்கொலை

Published On 2022-08-07 07:28 GMT   |   Update On 2022-08-07 07:28 GMT
  • பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
  • சென்னைக்கு சென்று வேலை செய்ய விரும்பியுள்ளார்.

கரூர்:

கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் சென்னைக்கு சென்று வேலை செய்ய விரும்பியுள்ளார். இதற்கு சத்தியமூர்த்தியின் பெற்றோர் அங்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சத்தியமூர்த்தி சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்தியமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News