திருப்பூரில் சிவாஜி நினைவுநாள் நிகழ்ச்சி
- திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் அரிமா சத்ருக்கன் முன்னிலை வகித்தார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 21வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் டைமண்ட் தியேட்டர் அருகில் சிவாஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பொதுசெயலாளர் அஸ்லாம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் அரிமா சத்ருக்கன் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பிரசன்ன குமார், துணைச் செயலாளர் சிவக்குமார் பிரபு, கோச் கிருஷ்ணன், சிவாஜி ராம், கேரளா செல்வம், மக்கள் மாமன்ற தலைவர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் கே.ஆர். சிவானந்தம், வின்சென்ட் ராஜ், ராஜா, கணேசன், பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று மாலை சிவாஜி கணேசன் படங்களின் நிலைத்த புகழுக்கு பெரிதும் துணை நிற்பது என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.