உள்ளூர் செய்திகள்

230 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்; சாராய வியாபாரிக்கு வலைவீச்சு

Published On 2022-09-22 10:13 GMT   |   Update On 2022-09-22 10:13 GMT
  • வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கெங்கவல்லி போலீசார் சோதனை செய்தனர்.
  • இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி, இந்திராநகர் காலனியில் வசித்து வருபவர் விஜய்.

இவரது வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கெங்கவல்லி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது போலீசாரை கண்டதும் வீட்டின் பின்புறம் வழியாக விஜய், சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் வீட்டில் நாலாபுறமும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார், விஜயை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் வீரகனூர் அருகே வேப்பம்பூண்டி ஏரிக்கரையில் சாக்குமுட்டையில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த கணேசன் (52) என்பவரை, வீரகனூர் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News