search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forgery"

    • பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.
    • கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி, பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பொன்னேரி சின்ன கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி பிரியா (24) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து பழகி வந்தனர்.

    இந்நிலையில் பிரியாவுக்கு சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இத னால் பிரியா ஏற்கனவே பழகி வந்த கோபால கிருஷ்ணனுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டித்தார். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு பொன்னேரி அடுத்த புளியந்தோப்பு பகுதியில் கோபால கிருஷ்ணனை வழி மறித்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோபால கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கள்ளக்காதலியை அடையும் போட்டியில் கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே புழல் அருகே காரில் தப்பி செல்ல முயன்ற பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரத்த கறைபடிந்த 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கோபால கிருஷ்ணனுடன் உள்ள தொடர்பை பிரியா தவிர்த்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. கோபால கிருஷ்ணன், பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதையடுத்து கோபால கிருஷ்ணனை தீர்த்துகட்ட முடிவு செய்த பிரியா இதுபற்றி தனது மற்றொரு கள்ளக்காதலனான ரவுடி ஆனந்தனிடம் கூறினார். அவரும் பிரியாவை அடையும் ஆசையில் கோபால கிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    அவர்களது திட்டப்படி பிரியா, கள்ளக்காதலன் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேர் அரிவாள் கத்தியுடன் நேற்று இரவு கோபால கிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். ஆனால் கோபால கிருஷ்ணன் நண்பர்களை பார்க்க புளியந்தோப்பு பகுதிக்கு சென்றால் அங்கு சென்று அவரை தீர்த்து கட்டிவிட்டனர். கோபால கிருஷ்ணனை அரிவாளல் வெட்டி கொன்ற போது அருகே நின்ற கள்ளக்காதலி பிரியா அதனை ரசித்து பார்த்து உள்ளார். பின்னர் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் கொலையாளிகள் அனைவரும் பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து தனியாக நின்ற பிரியா அவ்வழியே வந்த காரில் சவாரி கேட்டு புழல் பகுதிக்கு தப்பி சென்ற போது போலீசாரின் சோதனையில் சிக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கைதான பிரியா கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆட்டோ டிரைவரான லட்சுமணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் கள்ளத் தொடர்புகள் அதிகமானதால் லட்சுமணன் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டு அவ்வப்போது வந்து தனது குழந்தைகளை மட்டும் பார்த்து சென்று உள்ளார்.

    கணவர் வீட்டுக்கு வராததால் மேலும் சந்தோஷம் அடைந்த பிரியா பலருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. கோபால கிருஷ்ணன் தன்னுடன் தொடர்பை தொடர கூறியதால் ஏற்பட்ட மோதலில் அவரை மற்றொரு கள்ளக்காதலனை ஏவியே பிரியா தீர்த்து கட்டிவிட்டார்.

    இந்த கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மொபைல் கடை வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது பட்டப்பகலில் மோட்டர் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருடன் எனது மனைவி மலருடன் கடந்த 24 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர் (வயது 45). இத்தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தனர். பாண்டியன் அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு பாக்கியலட்சுமி, கோபாலகிருஷ்ணன், அருள், அபிநயா என்ற 4 பிள்ளைகள் உள்ள நிலையில் 4பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.நேற்று முன் தினம் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.இந்நிலையில் கண்டமங்கலம் எல்லை பகுதியில் உள்ள ராஜசேகர் கரும்பு தோட்டத்தில் மலர் மர்மமான முறையில்போர்வை மூடப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை நவமால்மருதூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாடு மேய்க்கும் போது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாடு மேய்த்தவர்கள்மூலம் ஊர் பொதுமக்களுக்கு தகவல் காட்டு தீயாய் பரவியது. மேலும் மலரின் தாலி கயிறு பிணம் கிடந்த இடத்தில் இருந்து சுமார்3 மீட்டர் தூரத்தில் கிடந்தது.உடனடியாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் -இன்ஸ்பெக்டர்கள் வெள்ளத்தங்கம், ஜோன்ஸ் ரவி மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து மலர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் கொலை செய்யப்பட்ட மலர் கணவர் பாண்டியன் கொலையாளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்த பாண்டியனை நேற்று காலை 7 மணிக்கு கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பாண்டியன் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார். அவர் கூறியதாவது:- விபரம் வருமாறு.நான் எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்தேன். படிப்பு வராததால் கூலி வேலை மற்றும் டீ கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தேன்.

    கடந்த 28 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த அஞ்சாபுலி மகள் மலர் என்பவரை முறைப்படி பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவருடன் எனது மனைவி மலருடன் கடந்த 24 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள். நான் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்தாள். ஊரில் என்னை ஏளனமாக பார்த்து கேவலமாக ஊர்காரர்கள் பேசி வந்தது எனக்கு கோபத்தை அதிகப்படுத்தியது. அவளை உயிரோடு விட்டால் தொடர்ந்து அசிங்கப்படுத்துவாள் என்பதால் அவளை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்.கடந்த 20- ந் தேதி இரவு சுமார் 9 மணிக்கு டீக்கடையில் இருந்து வீட்டிற்கு வந்து எனது மனைவி மலரிடம் குளிக்க சுடு தண்ணீர் வைக்க சொன்னேன். அவள் என்னால் முடியாது என்று மறுத்து விட்டாள். எங்களுக்குள் சண்டை வந்தது. அதனால் நான் வீட்டின் முன்பு சுடு தண்ணீர் வைத்து குளித்துவிட்டு படுத்து விட்டேன். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் என் மனைவி மலர் வீட்டில் இருந்து எழுந்து வெளியே சென்றாள். நான் சிறிது நேரம் கழித்து பின்தொடர்ந்து சென்றேன். அப்போது கோவில் குளம் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் என் மனைவியும் கள்ளக்காதலனும் இருப்பதை நான் பார்த்து விட்டு அருகில் சென்றேன்.என்னை பார்த்ததும் அவளது கள்ளக்காதலன்அங்கிருந்து ஓடி விட்டான் . என் மனைவி சேலையால் அவள் கழுத்தில் பின்புறமாக நின்று கொண்டு இருக்கினேன். எழுந்து திமிறினாள். அவளை கீழே தள்ளி இருக்கினேன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால் அவள் இறந்து விட்டால் என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்து நடந்து திருவாண்டார்கோவில் சென்று சாராயம் குடித்துவிட்டு பின் நடந்தே விழுப்புரத்தில் நான் வேலை செய்யும் ஓட்டல் முன்பு படுத்து தூங்கிவிட்டேன். என்னை போலீசார் பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    • காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் காஞ்சனா தேவி (வயது 26). இவருக்கும் சென்னையை சேர்ந்த சோலைராஜ் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு சிவரஞ்சனி (6), கெவின்ராஜ் (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். காஞ்சனா தேவி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே காஞ்சனா தேவிக்கு திடீர் உடல்நலக்கு றைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற வசதியாக சோலைராஜ் தனது மனைவியை, குழந்தைகளை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். காஞ்சனாதேவியின் தந்தை தள்ளு வண்டியில் அப்பளம் வியாபாரம் செய்து வந்தார்.

    அவர் தனக்கு உதவியாக பெரம்பலூர் மாவட்டம் கீரனூரை சேர்ந்த செந்தில் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். அவர் அடிக்கடி மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்துசென்றபோது காஞ்சனாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மாரிமுத்து செந்திலையும், மகள் காஞ்சனா தேவியையும் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சனாதேவி, தந்தை வீட்டில் இருந்து வெளியேறி அதே பகுதியில் குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார். மகளை மறக்க மனமில்லாத மாரிமுத்து அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்று பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் நேற்றும் அவர் சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. அக்கக் பக்கத்தில் விசாரித்தபோது காஞ்சனாதேவி வீட்டை காலி செய்துவிட்டு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அப்போது மாரி முத்துவை செல்போனில் தொடர்பு கொண்ட காஞ்சனாதேவி தன்னை தேட வேண்டாம், தான் செந்திலுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையுடன் மாயமான காஞ்சனாதேவி மற்றும் செந்திலை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த சீனிவாசராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் வாரி தோட்டாவை சேர்ந்தவர் சீதாராமாஞ்சேயலு. இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் அதே ஆஸ்பத்திரியில் வேலை செய்த பெண் டாக்டருடன் சீதாராமாஞ்சேயலுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இதுகுறித்து டாக்டரின் தந்தை சீனிவாசராவுக்கு தெரியவந்தது. சீனிவாசராவ் தனது மகளை மேல் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் பெண் டாக்டர் தனது தந்தைக்கு தெரியாமல் மீண்டும் குண்டூர் வந்து பிசியோதெரபி டாக்டருடன் தங்கினார்.

    வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக அனுப்பிய மகள் தனக்கு தெரியாமல் மீண்டும் திரும்பி வந்ததை அறிந்த சீனிவாச ராவ் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    சீதாராமாஞ்சநேயலு வீட்டிற்கு சென்ற சீனிவாச ராவ் உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இதனால் என்னுடைய மகளுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

    இதற்கு சீதா ராமாஞ்சேயலு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாச ராவ் தான் தயாராக எடுத்து வந்த மிளகாய் பொடியை டாக்டரின் முகத்தில் வீசினார். டாக்டர் சுதாரிப்பதற்குள் அருகிலிருந்த சுத்தி எடுத்து டாக்டரின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் டாக்டரின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சிறிது நேரத்தில் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து சீனிவாச ராவ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீதா ராமாஞ்சேயலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • திருநாவலூர் அருகே விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினவேலுவை கடுமையாக கண்டித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ம் திருநாவலூர் அருகே தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி மற்றும் மகன், மகள் கண்டித்த நிலையில், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடு த்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினவேலுவை கடுமையாக கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த ரத்தினவேல், குடிபோதை யில் நிலத்திற்கு போட வை த்திருந்த கலைக்கொள்ளி மருந்தினை குடித்து தற்கொ லைக்கு முயற்சித்தார். இதில் மயங்கி கிடந்த ரத்தினவேலு வை அவரது குடும்பத்தார் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில், திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை(35).இவர் மனைவியை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த மில் தொழிலாளியான முத்துமாரியுடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் நெருங்கிய தோழி ஈஸ்வரி. இந்த நிலையில் ஈஸ்வரி சில நாட்களாக முத்துமாரியுடன் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அழகுமலை, ஈஸ்வரிக்கு போன் செய்து முத்துமாரியுடன் ஏன் பேசவில்லை என விசாரித்துள்ளார். அப்போது ஈஸ்வரியின் சகோதரர் பாலமுருகன் செல்போனை பறித்து அழகுமலையை கண்டித்துள்ளார். பின்னர் முத்துமாரியின் வீட்டின் முன்பு அழகுமலை அவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது பாலமுருகன், தனது 2 நண்பர்களுடன் அங்கு வந்தார். அவர்கள் அழகுமலையை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்தி ரமடைந்த பாலமுருகன் தான் வைத்திருந்த கத்தியால் அழகுமலையை குத்திவிட்டு தப்பி சென்றார். அழகுமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
    • பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூரை சேர்ந்தவர் சுரேஷ் (33), மெக்கானிக். இவர் சேலம் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காட்டில் மோட்டார் சைக்கிள் சரி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.

    பணம் கேட்டு மிரட்டல்

    இவரது பட்டறை அருகில் சந்தோஷ் என்பவர் புல்லட் மோட்டார் சைக்கிள் சரிசெய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது உறவினர் கார்த்திக் (25). சந்தோஷ் மூலம் கார்த்திக், சுரேசிடம் அறிமுகம் ஆனார். இதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக், சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்பதும், அவரும் பணத்தை கொடுத்து சில நாட்களுக்கு பிறகு திரும்ப வாங்குவார், வழக்கம் போல சம்பவத்தன்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான அருண் (30), அனேக் (28) ஆகியோர் சுரேஷ் பட்டறைக்கு வந்தனர். பின்னர் சுரேசிடம் செலவுக்கு பணம் கேட்டனர்.

    அப்போது அவர் பணம் கொடுக்காததால் போலி துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    சிறையில் அடைப்பு

    அப்போது கார்த்திக் தப்பியோடி விட்ட நிலையில் அங்கிருந்த அருண், அனேக் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து போலி துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வந்தனர். அவரும் நேற்று போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • விவாகரத்து கேட்டு மனைவியை கணவர், கள்ளக்காதலியை மிரட்டினர்.
    • அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பிரிஞ்சா குளம் பகுதியை சேர்ந்தவர் வீரபிரபு. இவரது மனைவி லதா (23). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஒரு இளம் பெண்ணை வீரபிரபு வீட்டிற்கு அழைத்து வந்தார். லதா அது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு அந்த பெண் தொட்டியங்குளத்தை சேர்ந்த பூமி(23) என்றும் அந்த பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அதனால் லதா தனக்கு விவாகரத்து தர வேண்டும் என்றும் கூறி உள்ளார். ஆனால் லதா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது லதா விவகாரத்து தராவிட்டால், அவரையும், குழந்தையையும் கொன்று விடுவதாக கணவரும், பூமியும் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இதை யடுத்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லதா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பி மனைவியுடன் வாலிபர் தலைமறைவு
    • குடும்பத்தினர் எச்சரித்ததால் வீட்டை விட்டு ஓட்டம்

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 44 வயது மெக்கா னிக். இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் மெக்கானிக்கிற்கு அவரது தம்பி மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாள டைவில் இது கள்ளகாதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளகாதல் விவ காரம் குடும்பத்தி னருக்கு தெரிய வரவே அவர்கள் 2 பேரையும் கண்டித்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண்ணை அவரது 14 வயது பெண் குழந்தையுடன் மெக்கானிக் அழைத்து சென்றார். இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மற்றும் மெக்கா னிக்கின் மனைவி ஆகியோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்த னர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பி மனைவியுடன் ஓட்டம் பிடித்த மெக்கா னிக்கை தேடி வருகின்றனர்.

    • ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு செல்வேன். அங்கு 2 பேரும் சந்தித்து, தனிமையில் ஜாலியாக இருப்போம்.
    • போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு சேரன்மாநகர், பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரி (வயது 40).

    இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த 5 முக்கால் பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

    நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியது. இதில் தொடர்புடைய நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெகதீஷ்வரியின் வீட்டிற்குள் ஒரு நபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வீட்டிற்குள் சென்று வந்த நபர், ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது33) என்பதும், ரேஸ்கோர்சில் சூப் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெகதீஷ்வரிக்கும், மோகன்ராஜூக்கும் கள்ளக்காதல் இருந்ததும், தகராறில் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. நான் கோவை ராமநாதபுரத்தில் தங்கி இருந்து ரேஸ்கோர்சில் சூப் கடை வைத்து நடத்தி வருகிறேன்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேரன்மாநகர் பாலாஜி நகர் பகுதியில் வசித்தேன். அப்போது எனது வீட்டின் அருகே வசித்த ஜெகதீஷ்வரி என்பவரின் பழக்கம் கிடைத்தது. முதலில் நட்பாக பழகி வந்தோம். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. அவரது மகள் பள்ளிக்கு சென்று விடுவார். கணவரும் வேலைக்கு சென்று விடுவார்.

    அவர்கள் சென்ற பின்னர் நான், ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு செல்வேன். அங்கு 2 பேரும் சந்தித்து, தனிமையில் ஜாலியாக இருப்போம். இது அப்படியே தொடர்ந்து வந்தது.

    மேலும் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தேன். நான் அடிக்கடி போனில் பேசுவதால் எனது மனைவிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் என்னிடம் கேட்டபோதெல்லாம் நான் மழுப்பலாக பதில் அளித்து வந்தேன்.

    இதனால் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் நான் வீட்டை மாற்றுவது என முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் பகுதிக்கு வந்தேன்.

    இங்கு வந்த பின்னரும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. நான் அடிக்கடி அங்கு சென்று அவரை சந்தித்து ஜாலியாக இருந்து வந்தேன்.

    இதற்கிடையே நான் இங்கு வந்த பின்னர், ஜெகதீஷ்வரிக்கு வேறு பல ஆண்களுடனும் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடனும், அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இந்த தகவல் எனக்கு தெரியவந்ததும், நான் இதுகுறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் நான் எதுவும் சொல்வதையும் கேட்காமல் தொடர்ந்து அந்த நபர்களுடன் பழகி வந்தார்.

    இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் என்னிடம் பணமும் கேட்டு வந்தார். நானும் அடிக்கடி கொடுத்து வந்தேன். தொடர்ந்து பணம் கேட்டு கொண்டே இருந்தால் என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர் நான் பணம் தராவிட்டால் உனது மனைவியிடம் கள்ளக்காதலை தெரிவித்து விடுவேன் என்றார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாலும், வேறு பல ஆண்களுடன் பழகியதாலும் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அதன்படி சம்பவத்தன்று காலை ஜெகதீஷ்வரிக்கு போன் செய்து, நான் வீட்டிற்கு வர வா என கேட்டேன். அவரும் வா என அழைத்தார். இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு காலை 11 மணிக்கு சென்றேன். அங்கு அவரை சந்தித்து பேசி கொண்டு இருந்தேன்.

    அப்போது எங்களுக்குள் இதுதொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்துடன் சென்றதால், எங்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

    பின்னர் 1 மணியளவில் அங்கிருந்து எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். தொடர்ந்து கொலை நடந்ததை வெளியில் காட்டி கொள்ளாமல் எப்போதும் போல சகஜமாக எனது வேலைகளை செய்து வந்தேன். இதனால் என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

    மேலும் வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் வீட்டில் இருந்த நகையை எடுத்து சென்றேன். மேலும் போலீசார் என்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக 2 வாகனங்களிலும், நம்பர் பிளேட்டை மாற்றியும் பயணித்தேன். ஆனால் போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து, நான் அணிந்திருந்த சட்டையை வைத்து என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் மோகன்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • கள்ளக்காதலன் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எப்படி வெளியுலகிற்கு காட்டுவது? என்று கவலையுற்றார்.
    • கொல்லப்பட்ட குழந்தையின் உடலை கடற்கரையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்தவர் ஜூலி (வயது 40). இவரது கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஜூலி தனது 15 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ஜூலிக்கு வேறொருடருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனால் ஜூலி கர்ப்பமானார்.

    கணவர் இறந்து 12 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கள்ளக்காதலனால் தான் கர்ப்பமானதை, கள்ளக்காதலை போன்று ஜூலி யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துள்ளார். நாட்கள் செல்லச்செல்ல அவரது வயிறு பெரிதாக தொடங்கியது.

    அதன்பிறகும் அவர் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும தெரிவிக்கவில்லை. அவர் ரகசியமாக மருத்துவரிடம் உடல்நிலையை பரிசோதித்தபடி இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூலிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

    கள்ளக்காதலன் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எப்படி வெளியுலகிற்கு காட்டுவது? என்று கவலையுற்றார். ஆகவே அவர் அந்த குழந்தையை கொலை செய்து புதைத்துவிட திட்டமிட்டார். அதன்படி அங்குள்ள கடற்கரைக்கு பிறந்த குழந்தையை எடுத்துச்சென்றிருக்கிறார்.

    அங்கு குழந்தையின் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சு திணற வைத்து கொடூரமாக கொலை செய்தார். குழந்தை பிறந்த சில மணித்துளிகளிலேளே இந்த கொடூர செயலில் ஜூலி ஈடுபட்டுள்ளார். கொல்லப்பட்ட குழந்தையின் உடலை கடற்கரையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடற்கரையில் ஜூலி புதைத்த குழந்தையின் உடல் வெளியே வந்துவிட்டது. நாய்கள் குழந்தையின் உடலை கடித்து குதறியபடி இருந்தன. இதனைப்பார்த்த சிலர் குழந்தை பிணம் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை மூச்சை திணறடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. குழந்தையை கொன்றது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கை யில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    அப்போது தான், ஜூலிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததை போலீ சார் கண்டறிந்தனர். இதை யடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தனக்கு குழந்தையே பிறக்க வில்லை, அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    ஆனால் ஜூலி வீடு உள்ள பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜூலி கர்ப்பமாக இருந்ததும், அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் குழந்தை பெற்றதும் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை தெரிவித்து ஜூலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் தனக்கு குழந்ைதை பிறந்ததையும், அதனை மூச்சு திணறடித்து கொன்று கடற்கரையில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜூலியை போலீசார் கைது செய்தனர்.

    கணவர் இறந்து விதவை யாக வாழ்ந்து வந்தநிலையில், கள்ளக்காதலன் மூலம் கருவுற்று குழந்தை பெற்றது வெளியே தெரிந்தால் தன்னை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கேவலமாக பேசுவார்கள் என்பதால், கர்ப்பமானதையும், குழந்தை பெற்றதையும் மறைத்துவிட்டதாகவும், பெற்ற குழந்தையை பிறந்த சிறிது நேரத்தி லேயே கொன்று புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் ஜூலி தெரிவித்திருக்கிறார்.

    கள்ளக்காதலன் மூலம் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கொடுரமாக கொன்று புதைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×