உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கணவன் தற்கொலை

Published On 2022-08-07 06:12 GMT   |   Update On 2022-08-07 06:12 GMT
  • மேல்மலையனூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
  • அவரை வீட்டுக்கு வருமாறு கடந்த 4-ந்தேதி வேலு அழைத்துள்ளார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்வயலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு(வயது 60) விவசாயி. அவரது மனைவி புஷ்பா (55). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் புஷ்பா அதே கிராமத்தில் உள்ள தன் தாய்வீட்டுக்கு சென்று விட்டார். அவரை வீட்டுக்கு வருமாறு கடந்த 4-ந்தேதி வேலு அழைத்துள்ளார். இதற்கு புஷ்பா மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த வேலு பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வேலு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News