- பெருமாள் கோயில் ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடம் மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- கபிஸ்தலம் ஊராட்சியில் நர்சரி பகுதியில் சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டனர்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம் பெருமாள்கோவில் மற்றும் கபிஸ்தலம் ஆகிய ஊராட்சிகளில் ஜல் சக்தி அபியான் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பெருமாள் கோயில் ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடம் மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கபிஸ்தலம் ஊராட்சியில் நர்சரி பகுதியில் சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டனர்.
அதிக அளவில் மரக்கன்றுகள் பயிர் செய்து அருகில் உள்ள பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.பயிர் செய்த கன்றுகளை அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்குமாறு அறிவுறுத்தினர்.
மத்திய குழுவினருடன் தஞ்சை மாவட்ட துணை கலெக்டர் ஸ்ரீகாந்த், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ரமேஷ் பாபு, ஒன்றிய பொறியாளர்கள் சரவணன், சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், சுமதி குணசேகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், தட்சிணாமூர்த்தி, பணி மேற்பார்வையாளர்கள் செல்வராணி, ரமேஷ், மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் பலர் உடன் சென்றனர்.