தென்காசி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
- பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
- பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர் மூலம் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.
தென்காசி:
தென்காசி சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள 7-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஜேனட் பொற்செல்வி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கல்பனா, பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி ஆசிக் முபினா ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.
பேரணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர் கொண்டு மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. கோஷங்கள் மாணவர்களால் எழுப்பப்பட்டது.
பேரணி பள்ளியில் தொடங்கி சுவாமி சன்னதி தெரு வழியாக காசி விஸ்வநாதர் ஆலயம் வரை சென்று அம்பாள் சன்னதி, தெற்கு ஒப்பனை பிள்ளையார் கோவில் தெரு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பேரணிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜெப ராணி,மெய்யப்பன், திருமலைகொழுந்து, ஆண்டாள், விஜய கனி ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியர் திருமலைகொழுந்து நன்றி கூறினார்.