உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-08 09:36 GMT   |   Update On 2022-07-08 09:36 GMT
  • அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும்பிளாடிக் கப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கு மாறு பேரணியில் வலியுறு த்தப்பட்டது.
  • பேரணி ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய, தெரு க்கள் வீதிகள் வழியாக சென்று அரசு தொடக்கப்பள்ளிவரை சென்று நிறைவுற்றது.

மெலட்டூர்:

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், இரும்புதலை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி பேரணியை தொடங்கி வைத்தார்.

அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும்பிளாடிக் கப்பு களை பயன்படுத்துவதை தவிர்க்கு மாறு பேரணியில் வலியுறு த்தப்பட்டது.

பேரணி ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய, தெரு க்கள் வீதிகள் வழியாக சென்று அரசு தொடக்கப்பள்ளிவரை சென்று நிறைவுற்றது. இதில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.ரமா பிரபா.உதவி ஆசிரியர்கள் நிர்மலா, லெட்சுமணன், ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் ஊரா ட்சி பணியாளர்கள், மாண வர்கள், கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News