உள்ளூர் செய்திகள்
மொபட் மீது கார் மோதி டெலிபோன் ஊழியர் படுகாயம்
- திருச்செங்கோடு, தொக்கவாடி பகுதியில் சேலம், கோவை புறவழிச்சாலையில் சாலையை மொபட்டில் கடக்க முயன்றார்.
- அப்போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
குமாரபாளையம்:
திருச்செங்கோடு, தொக்கவாடி பகுதியில் வசிப்பவர் பரந்தாமன்(வயது 57). தொலைபேசி நிலைய ஊழியர். இவர் நேற்று எக்ஸல் கல்லூரி பிரிவு சாலை பகுதியில் சேலம், கோவை புறவழிச்சாலையில் சாலையை மொபட்டில் கடக்க முயன்றார்.
அப்போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த பரந்தாமன் சிகிச்சைக்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.