உள்ளூர் செய்திகள்
மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி
மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி:
மேடவாக்கம், பாரதி முதல் தெருவை சேர்ந்தவர் தேவி (வயது56). இவர் தனது வீட்டின் முன்பு உள்ள குடிநீர் மோட்டார் சுவிட்ச்சை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தேவி பலியானார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.