உள்ளூர் செய்திகள்
.

தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

Published On 2022-05-27 13:21 GMT   |   Update On 2022-05-27 13:21 GMT
தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 40).  கட்டிட தொழிலாளி

இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு ஓமலூரில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  

சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது எதிரே வந்த மற்றோரு மோட்டார் சைக்கிளில் வந்த பெரியாகடம்பட்டியை சேர்ந்த சிவா (21) என்பவர்  பலமாக மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர் .அவர்களை   மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

 வழியிலேயே சந்திரசேகரன்  பரிதாபமாக இறந்தார்.  சிவா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சந்திரசேகரனின் மனைவி உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News