உள்ளூர் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2022-05-23 08:39 GMT   |   Update On 2022-05-23 08:39 GMT
வலங்கைமான் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நீடாமங்கலம்:

வலங்கைமான் ஸ்ரீபெரியநாயகி அம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி சம்வத்ஸார அபிஷேகமும் பஞ்ஜாஷரஹோமமும் அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. 

சர்வசாதக நிகழ்ச்சிகளை வெங்கடேச சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர்கள் தண்டபாணி குருக்கள் ராஜகுரு சிவம், ஜெகன் சிவம் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியினை தெருவாசிகள் மற்றும் கைலாசநாதர் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் . நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News