உள்ளூர் செய்திகள்
.

சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தேர்வு

Published On 2022-05-22 08:56 GMT   |   Update On 2022-05-22 08:56 GMT
சேலம், நாமக்கல்லில், நாளை சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தேர்வு
சேலம்:

இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.  

இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ.    10-ம் வகுப்பு  மாணவ- மாணவிகளுக்கு  பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதன்படி, நாளை (திங்கட்கிழமை) கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்திற்கான தேர்வு  நடக்கிறது. இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை என 2 மணி நேரம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News