உள்ளூர் செய்திகள்
சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தேர்வு
சேலம், நாமக்கல்லில், நாளை சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தேர்வு
சேலம்:
இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, நாளை (திங்கட்கிழமை) கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை என 2 மணி நேரம் நடைபெறுகிறது.