உள்ளூர் செய்திகள்
பேரறிவாளன் விடுதலை: ராஜீவ்காந்தி கொலையாளிகள் குற்றவாளிகள் தான்- கே.எஸ்.அழகிரி
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதை நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்- வக்கீல் புகழேந்தி