உள்ளூர் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பேசிய காட்சி.

செந்திலாண்டவர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

Published On 2022-05-17 09:20 GMT   |   Update On 2022-05-17 09:20 GMT
செந்திலாண்டவர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
தென்காசி:

தென்காசி அருகே ஆய்குடியில் உள்ள  அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் டாக்டர் புதிய பாஸ்கர் தலைமை தாங்கினார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் சேவியர் இருதயராஜ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் விதிமுறைகள் பற்றி உரையாற்றினர்.
 இதில் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News