உள்ளூர் செய்திகள்
சேலம் ஓட்டல் மேலாளரின் மோட்டார் சைக்கிளை திருடிய போலி அதிகாரி கைது
சேலம் ஓட்டல் மேலாளரின் மோட்டார் சைக்கிளை திருடிய போலி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் நரசோதிபட்டி முகில்நகர் 5-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 53). இவர் சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள லாட்ஜில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார. இந்த நிலையில் இந்த லாட்ஜில் பிரபாகரன் என்பவர் ஆர்.ஐ என்று கூறி அடிக்கடி ரூம் எடுத்து தங்குவது வழக்கம்.
கடந்த பிப்ரவரி 2-ந் தேதி ஒட்டலில் சென்று சாப்பிட வேண்டும் என்று கூறி லட்சுமணன் மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றார். மோட்டர் சைக்கிளை மீண்டும் கொண்டு வராததால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொண்டலாம்பட்டி பகுதியில் காயங்களுடன் கிடைத்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அவரிடம் கொண்டலாம் பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் தன்னை சிலர் தாக்கியதாக கூறினார்.
தொடர்ந்த விசாரணையில் இவர் தான் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற பிரபாகரன் என்பது தெரியவந்தது. அவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.