உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால இலவச பயிற்சி முகாம்-16-ந் தேதி தொடங்குகிறது

Published On 2022-05-13 09:42 GMT   |   Update On 2022-05-13 09:42 GMT
நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால இலவச பயிற்சி முகாம் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
நெல்லை:

பள்ளி மாணவ- மாணவிகள் தங்களின் கோடைகால விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி முகாமில் ஓவியப் பயிற்சி, கலைப்பயிற்சி, கழிவுகளிலிருந்து கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ்,  கதை சொல்லும் பயிற்சி ,  போன்ற ஏராளமான பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சி முகாம் வருகிற 16-ந் தேதி தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7502433751 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விருப்பம் உள்ள பள்ளி  மாணவ- மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்   சிவ சத்திய வள்ளி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News