search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "training camp"

    • சமூக நலத்துறை இயக்குனர் குமரன் தொடங்கி வைத்தார்
    • சமூக சேவகர் முருகசாமி, பேபி சாரா இல்ல அலுவலர் தமிழ்ச்செல்வம் மற்றும் ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பு பகுதியில் உள்ள பேபி சாரா இல்லத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மையம், சுய வழக்காடுதல் மன்றம் மற்றும் பரிவார் அமைப்பு ஆகியவை இணைந்து சுய வழிகாட்டுதல் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.  பயிற்சி முகாம் தொடங்கியது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மைய செயலாளர் ஸ்டீபன்ராஜ் வரவேற்றார்.

    புதுவை சமூக நலத்துறை இயக்குநர் குமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.

    பேபி சாரா இல்ல துணை நிறுவனர் விக்டோரியா முன்னிலை வகித்தார். திருச்சி குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் வக்கீல் பவுலின்சோபியா ராணி, சுய வழக்காடு பயிற்சியாளர் நிர்மலா ஆகியோர் பயிற்சிகளை நடத்து கின்றனர்.

    வீராம்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அல்லி மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். சமூக சேவகர் அய்யம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூக சேவகர் முருகசாமி, பேபி சாரா இல்ல அலுவலர் தமிழ்ச்செல்வம் மற்றும் ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    முடிவில் ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மைய தன்னார்வலர் நித்யா ஜெனிபர் நன்றி கூறினார்.

    • வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் கட்டண பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்குள் வந்து ரூ.300 செலுத்தி பயிற்சியில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்று பயனடையலாம்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இலாபகரமான கறவைமாடு வளர்ப்பு என்ற தலைப்பில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) ஒருநாள் கட்டண பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்குள் வந்து ரூ.300 செலுத்தி பயிற்சியில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் அமுதா ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • உச்சிப்புளி அருகே ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
    • முகாமை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான் கிராமத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயல லிதா மீன்வளப் பல்கலைக்க ழகத்தில் மீன்வளத்தொழில் காப்பகம், தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் மற்றும் ராமநாதபுரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம் குறித்த ஒரு வாரகால உள்வளாக பயிற்சியை தொடங்கியது.

    அதற்கான தொடக்க விழா நேற்று அரியமான் கிராமத்தில் நடந்தது. விழா விற்கு மீன்வளத் தொழில் காப்பக இயக்குநர் முனை வர் நீதிச்செல்வன், தலைமை தாங்கினார். உத விப் பேராசிரியர் கலைய ரசன் வரவேற்றார். ராமநா தபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசு கையில், மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். ராமேசுவரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி ஆழ்கடல் மீன்பிடிப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறினார்.

    பயிற்சியில் ராமேசுவரம் பகுதியை சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு திறன் மேம்பாட் டுக் கழகம், உதவி இயக்குநர் குமரவேல், உதவி இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கேப் டன் சகாயரெக்ஸ் இயக்கு னரக ஊழியர்களுடன் இணைந்து விழா ஏற் பாட்டை செய்தார். மாணவி கிருத்திகா நிகழ்ச்சியை தெகுத்து வழங்கினார். தானி யங்கி பொறியாளர் சிவ சுடலைமணி நன்றி கூறினார்.

    • கரியமானிக்கத்தில் உள்ள வேளாண் பண்ணையில் நடைபெற்றது.
    • தேனீ வளர்ப்பு முறை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் ன்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தேனீ.வளர்ப்பு பயிற்சி முகாம் நெட்டப்பாக்கம் தொகுதி கரியமானிக்கத்தில் உள்ள வேளாண் பண்ணையில் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாரன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடா ஜலபதி ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் நடைபெற்ற பயிற்சி முகாமில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர், ரேவதி, பூச்சியியல் துறை, உதவி பேராசிரியை இலக்கியா, தோட்டக்கலைத்துறை, மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை உதவி பேராசிரியர் ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை வழிநடத்தினர்.

    இம்முகாமின் சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில தேனீ வளர்ப்பு பண்ணை உரிமையாளர், சந்துரு கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு முறை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்.

    • முகாமில் பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமைதாங்கினார்.

    தனியார் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த கார்த்திக் நாகப்பட்டினம் நகரம் மற்றும் வட்டாரத்தில் ஹோட்டல், இனிப்பகம் மற்றும் பேக்கரியில் பணிபுரிபவர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்கினார்.

    நாகப்பட்டினம் நகர ஹோட்டல், தேநீர் மற்றும் இனிபக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் இரா.முருகையன் மற்றும் நாகூர் நகர வர்த்தகர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உணவு தயாரிப்பின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துவது, தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பாது காப்பாக வைத்திருப்பது, பரிமாறுவது உட்பட அனைத்து உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    பின்னர் பங்கேற்பாளர்கள் சந்தேகங்க ளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் 80-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.

    முடிவில் கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.

    • மக்களுக்கு மின் விபத்து நேராமல் ஊழியர்கள் செயல்படவேண்டும்
    • அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    திருவாரூர்:

    திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் கூறுகையில், பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளர்கள் எர்த்ராடு கண்டிப்பாக பணியின்போது பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தாத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இயற்கை இடற்பாட்டால் மின் கம்பி கள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து ஊழியர்கள் செயல்படவேண்டும். மழை நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் பிரிவு பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.





    வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் நடவடிக்கை

    ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குப்பட்ட நாய்க்கனூர் ஊராட்சியில் உள்ள கிராம பகுதிகளில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகருக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் மேலா திருப்பதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் தேசிய உணவு திட்டத்தின் ஆலோசகர் வாசுதேவரெட்டி. ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவிதவள்ளி, வேளாண்மை அலுவவர் சோபனா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைத் தலைவர் தமிழ்செல்வி ஜோதிலிங்கம் ஆகியோர் நன்றி கூறினார்.

    • வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது.
    • பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    இந்த முகாமில் வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். முகாமில் தூய்மை பணியாளர்கள் செயல்படுவது குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதற்கு முன்னதாக வேலூர் டவுன் பஞ்சாயத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணி புரிந்து வரும் செந்தில்குமார் (45), மற்றும் 8 ஆண்டுகளாக பணிபுரியும் குப்பாயி (45)ஆகிய இருவருக்கும் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

    இந்த பயிற்சியில் பரமத்தி செயல் அலுவலர் சுப்பிரமணி, பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ், வெங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன்,எருமப்பட்டி செயல் அலுவலர் வசந்தா மற்றும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் “கிராம அடிப்படை பயிற்சி” நடைபெற்றது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம் வீர ணாம்பாளையம் கிராமத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் "கிராம அடிப்படை பயிற்சி" நடைபெற்றது. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயி களை வரவேற்று பயிற்சி அளித்தார்.

    பயிற்சியில் பர மத்தி வட்டார வேளாண்மை அலுவ லர், மோகனபிரியா, துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட கலவைகள் பயிருக்கு இடுவதன் முக்கி யத்துவம் குறித்து கூறினார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் கலந்துகொண்டு வேளாண் மானிய திட்டம் குறித்து கூறினார். மேலும் கால்நடை உதவி மருத்துவர் நளினி, வனஅலுவலர் ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் நிவேதா மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் தங்களது துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

    முடிவில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் தனலட்சுமி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி நன்றி கூறினார்.

    • கழிவுநீர் அகற்றும் பணி பயிற்சி முகாம் நடந்தது.
    • முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் கழிவுநீர் அகற்றுவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் கழிவுநீர் சேகரிப்பு, தொட்டிகளிலிருந்து கழிவுநீரை எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகள் பற்றி கழிவுநீர்ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடக்கிவைத்தார். துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல்அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். இந்த முகாமில் நவீன முறையில் பாதுகாப்பாக கழிவுநீர்களை சுத்தம் செய்யும் முறை பற்றி தூய்மை இந்தியா திட்ட முதன்மை பயிற்றுநர் ராம்குமார், சுகாதாரபணிஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் பயிற்சியளித்தனர். மதுரை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரூராட்சி செயல்அலுவலர்கள், 18 சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதாரபணிமேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.

    • நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்றது.
    • இப்பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை, தொடக்கநிலை), முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் (மேல்நிலை, உயா்நிலை), உதவி திட்ட அலுவலா்-1, உதவி திட்ட அலுவலா்-2, பள்ளி துணை ஆய்வாளா்கள், அரசு மேல்நிலை, உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.

    நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவனத்தில் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சி முகாமை முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அவா்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடா்பான வழிகாட்டுதல்களை வழங்கினா்.

    குறிப்பாக, பள்ளி வகுப்பறை செயல்பாடுகளை எவ்வாறு பாா்வையிடுவது, ஆசிரியா்கள், மாணவா்களின் கலந்துரையாடலை பாா்வையிட்டு தகவல்கள் சேகரிப்பது, தகவல்களின் உண்மைத் தன்மை, அதன் முக்கியத்துவம், பள்ளிப் பாா்வை செயலியில் பதிவிடுவது போன்றவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

    இதில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் முருகன், மல்லசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலா் சக்திவேல், நாமக்கல் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ரவிக்குமாா், பள்ளி துணை ஆய்வாளா்கள் கை.பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்பட 268 போ் கலந்து கொண்டனர்.

    • கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டாரம் கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார். கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (விதைச்சான்று) சித்திரைச்செல்வி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், அங்கக சான்று பெறுவதற்கான முறைகள், உழவர் தொகுப்பு உருவாக்குதல், இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், ஆகியவற்றை குறித்து விளக்கினார். திருச்சி சிறுகமணி பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின் தென்னையில் ஏற்படும் நோய்கள், பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள், உயிரி உரத்தின் பயன்பாடுகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் குறித்து விளக்கம் அளித்தார். கபிலர்மலை வேளாண் உதவி இயக்குநர் ராதாமணி அங்கக வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்வதன் பயன்கள் பற்றி விரிவாக விவரித்தார். இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நிஷா ஆகியோர் செய்திருந்தனர். 

    ×