உள்ளூர் செய்திகள்
சிவகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகிரி:
சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பும், பேரூராட்சி அலுவலகம் முன்பும் 1.4.2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க சிவகிரி வட்ட கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான முத்துப்பாண்டியன், செயலாளர் வைகுண்டசாமி, இணை செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, மாவட்ட அரசு ஊழியர் சங்க இணை செயலாளர் மாடசாமி, கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் அழகுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள், தாலுகா பணியாளர்கள், கருவூலம் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் அனைத்துத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பும், பேரூராட்சி அலுவலகம் முன்பும் 1.4.2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க சிவகிரி வட்ட கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான முத்துப்பாண்டியன், செயலாளர் வைகுண்டசாமி, இணை செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, மாவட்ட அரசு ஊழியர் சங்க இணை செயலாளர் மாடசாமி, கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் அழகுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள், தாலுகா பணியாளர்கள், கருவூலம் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் அனைத்துத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.