உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாளையில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2022-05-09 09:46 GMT   |   Update On 2022-05-09 09:46 GMT
பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.
நெல்லை:

பாளை தாலுகா அருகே உள்ள மேலக்குளத்தை சேர்ந்தவர் மலர்ராஜ்.

இவரது மகள் அபிராமி (வயது23). இவர் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார்.

நேற்று வீட்டில் இருந்த அபிராமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

 இதுகுறித்து புகாரின் பேரில் பாளை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News