உள்ளூர் செய்திகள்
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: சேலம், நாமக்கல்லில் நாளை மறுநாள் அறிவியல் தேர்வு நடக்கிறது.
சேலம்:
இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பகுதி-2 பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி நாளை மறுநாள் (10-ந்தேதி) புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது.