உள்ளூர் செய்திகள்
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த விஜய் வசந்த்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வரும் நாட்களில் மக்களின் குறைகள் கேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் குறைகளை கேட்டு அவற்றிற்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
அகஸ்தீஸ்வரத்தில் வைத்து தொகுதி மக்களின் குறைகள் கேட்கும் முகாம் நடைபெற்றது. இதில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். ஏராளமான பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
இந்த குறைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து சென்று தீர்வு காணும் நடவடிக்கை நேற்றைய தினமே துவங்கியது.
வரும் நாட்களில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இத்தகைய முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் குறைகளை கேட்டு அவற்றிற்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நேற்றைய குறை கேட்கும் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்த அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த முகாமிற்கு பக்கபலமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றி. ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக விஜய் வசந்த் எம்.பி. கூறியுள்ளார்.
அகஸ்தீஸ்வரத்தில் வைத்து தொகுதி மக்களின் குறைகள் கேட்கும் முகாம் நடைபெற்றது. இதில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். ஏராளமான பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
இந்த குறைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து சென்று தீர்வு காணும் நடவடிக்கை நேற்றைய தினமே துவங்கியது.
வரும் நாட்களில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இத்தகைய முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் குறைகளை கேட்டு அவற்றிற்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நேற்றைய குறை கேட்கும் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்த அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த முகாமிற்கு பக்கபலமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றி. ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக விஜய் வசந்த் எம்.பி. கூறியுள்ளார்.