உள்ளூர் செய்திகள்
ஏறுகள் பூட்டி உழுது வழிபாடு செய்த விவசாயிகள்
திருப்பரங்குன்றத்தில் ஏறுகள் பூட்டி உழுது விவசாயிகள் வழிபாடு செய்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தென்கால் கண்மாய், பானாங்குளம், செவ்வந்தி குளம் உள்ளிட்ட 7 கண்மாய் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கிரிவலம் வந்தனர்.
விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோவில் நிலத்தில் 4 ஏறுகள் பூட்டி உழுது கிரிவலம் வந்தனர். தொடர்ந்து கல்வெட்டு குகைக்கோவிலில் இந்த ஆண்டு விவசாய தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம் மற்றும் கோவில் திருவிழாக்கள் கொண்டாடுவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது.
இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றத் தில் பாரம்பரியமாக விவசாயிகள் 4 ஏறுகள்பூட்டி உழுது வழிபாடு செய்வது சிறப்பாகும்.