உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜான்பீட்டர். கூலித்தொழிலாளி. கடந்த மாதம் சிறுநாயக்கன்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சீனிவாசன் பரிந்துரை செய்தார். இதில் சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜான்சன், சிஜூ, ஆரோக்கியதாஸ் ஆகியோர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் பாஸ்கர் வில்லியம் (வயது22), நோவா (23), மாதவன் (24) ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜான்பீட்டர். கூலித்தொழிலாளி. கடந்த மாதம் சிறுநாயக்கன்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சீனிவாசன் பரிந்துரை செய்தார். இதில் சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜான்சன், சிஜூ, ஆரோக்கியதாஸ் ஆகியோர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் பாஸ்கர் வில்லியம் (வயது22), நோவா (23), மாதவன் (24) ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.