உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களுக்கு நாட்டுப்படகுகளுக்கு வெளிப்பொருத்தும் எந்திரம் வழங்கிய காட்சி.

திருச்செந்தூர் பகுதிகளில் மானியத்தில் 67 மீனவர்களுக்கு நாட்டுப்படகு எந்திரம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2022-03-16 11:15 GMT   |   Update On 2022-03-16 11:15 GMT
திருச்செந்தூர் பகுதிகளில் மானியத்தில் 67 மீனவர்களுக்கு நாட்டுப்படகு எந்திரங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திருச்செந்தூர் பகுதிகளில் ஆலந்தலை மீனவர்கள் 20 பேருக்கும், அமலிநகர்  மீனவர்கள் 24 பேருக்கும்,  காயல்பட்டணம் நகராட்சிக்குட்பட்ட சிங்கித்துறை  மீனவர்கள் 23 பேர் என 67   பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 சதவீத மானிய விலையில் படகுகளில் வெளிப் பொருத்தும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, 67 மீனவர் களுக்கு ரூ. 32 லட்சம் மானி யத்தில் வெளிப் பொருத்தும் எந்திரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புஹாரி, மீன்வளத் துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் விஜயராகவன், ஆலந்தலை பங்குத்தந்தை ஜெயக்குமார், திருச்செந்தூர் நகராட்சித்தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், உள்பட  பலர் கலந்து கொண்டனர். ஆலந்தலை ஊர்நலக்கமிட்டி தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News