உள்ளூர் செய்திகள்
கராத்தே போட்டியில் பல்லடம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
திருப்பூரில் சோபுகாய் கராத்தே அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்.
இதுகுறித்து கராத்தே பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது:
திருப்பூரில் சோபுகாய் கராத்தே அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டா,குமிட்டோ,உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 12 தங்கப்பதக்கம், 14 வெள்ளிப்பதக்கம், 20 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கன்சன் இந்தியா அறக்கட்டளை அமைப்பின் சார்பில் அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் அமைப்பின் நிர்வாகி சதீஷ்குமார், கராத்தே பயிற்சி ஆசிரியர் மாணிக்கம், பயிற்சியாளர் சரவணன், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.