என் மலர்
நீங்கள் தேடியது "karate competition"
- பரமக்குடியில் தென்னிந்திய கராத்தே போட்டி நடந்தது.
- இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் யூனிக் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி அண்ட் கிறிசின் கான் சித்தோரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 8 வயது முதல் 21 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆயிரவைசிய சபைத் தலைவர் ராசி.என்.போஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் எஸ்.கே.பி.லெனின்குமார், ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர். கியோசி ரவி மற்றும் மாஸ்டர் கியோசி ராமமூர்த்தி, மாஸ்டர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்பட 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
- போட்டிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
சாயர்புரம்:
தூத்துக்குடி ஸ்பார்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கராத்தே அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்திய 5-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
தமிழக மீனவளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டி களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆறுமுக பெருமாள், முக்காணி கூட்டுறவு வங்கி தலைவர் உமரி சங்கர், சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் மத்திய பகுதி பி.ஜி.ரவி, மேற்கு கொம்பையா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், சாயர்புரம் பேரூராட்சி தலைவி பாக்கிய லெட்சுமி, அறவாழி, பேரூர் செயலா ளர்கள் ஏரல் ராயப்பன், சாயர்புரம் கண்ணன், பெருங்குளம் நவநீத முத்துக் குமார், ஸ்ரீவைகுண்டம் சுப்புராஜ், மாவட்ட பிரதி நிதிகள் பேய்க்குளம் ஜெயக் குமார், அருண் கிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் சண்முக ராஜா, குலையன் கரிசல் கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ், முன்னாள் சாயர் புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், நடுவக் குறிச்சி நாராயணன், பழைய காயல் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கராத்தே மற்றும் சிலம்பம் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கராத்தே முதன்மை மாஸ்டர் சுரேஷ் குமார் தலைமையில் கராத்தே மாஸ்டர்கள் பாட்ஷா, கணேஷ்குமார், முகில் மாறன், திலீப் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- இதில் 8 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
விளாத்திகுளம்:
கோவா மாநிலம் வாஸ்கோடாகாமாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாட்டிலிருந்து விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள் கட்டா பிரிவு, சண்டை பிரிவில் பங்கேற்றனர். இதில் 8 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ-இந்திய நிறுவன தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் நடுவராக செயல்பட்டார்.
கராத்தே போட்டியில் வெற்றி பெற்று பதங்கங்களை வென்ற மாணவ- மாணவிகளை அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மாா்கண்டேயன் எம்.எல்.ஏ., பள்ளி தாளாளர் வீமராஜ், செயலாளர் சுப்பா ரெட்டியார், பள்ளி இயக்குனர் இந்திரா ராமராஜு, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் கராத்தே பயிற்சியாளர் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.
- கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தில் சோபுகான் இன்டர்நேஷனல் கராத்தே அசோசியேசன் சார்பாக 18-வது நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவ -மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி:
கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தில் சோபுகான் இன்டர்நேஷனல் கராத்தே அசோசியேசன் சார்பாக 18-வது நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 500 பேர் கலந்து கொண்டனர்.
கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிரியேடிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவ -மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அவர்களை எஸ்.பி. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கிரியேடிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சி யாளர்கள் மணிகண்டன், மரிய இக்னேசியஸ் ஜோ ஆகியோர் உடனிருந்தனர்.
- ஹிரோஷிஹா கராத்தே ‘சாம்பியன் ஷிப்’ -2022 போட்டி நடைபெற்றது.
- போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள 'நிப்ட் டீ' கல்லூரியில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஹிரோஷிஹா கராத்தே 'சாம்பியன் ஷிப்' -2022 போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்–சூர் கபடி சங்க பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிப்ட் டீ கல்லூரி நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மேலாளர் சிவகுமார் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டததில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட 2-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஹிரோஷி ஹா கராத்தே சாம்பியன்ஷிப் 2022 ஓவர் ஆல் போட்டியில் முதல் இடத்தை காங்கயம் விவேகானந்தா அகாடமி பள்ளியும், 2-ம் இடத்தை அவினாசி நாச்சம்மாள் வித்தியாவாணி பள்ளி அணியும், 3-ம் இடத்தை திருப்பூர் ஏ.வி.பி.டிரஸ்ட் பள்ளியும் பிடித்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
- சென்னையில் 17-வது அகில இந்திய சிட்டோ ரியோ நிப்பான் கராத்தே டூ காய் இந்தியா சேம்பியன் போட்டி சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
- கராத்தே போட்டியில் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் 60 பேர் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை:
சென்னையில் 17-வது அகில இந்திய சிட்டோ ரியோ நிப்பான் கராத்தே டூ காய் இந்தியா சேம்பியன் போட்டி சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கராத்தே போட்டியில் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் 60 பேர் கராத்தே தலைமை பயிற்சியாளர் ஷீகான் சங்கர் மற்றும் மாவட்ட பயிற்சி யாளர்கள் முத்துமாலை, முத்துசுடர், இசக்கியப்பன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர். அதில் முதல் பரிசு 13 பேரும், 2-வது பரிசு 23 பேரும், 3-வது பரிசு 13 பேரும் மொத்தம் 49 பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றனர்.
போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுப்பதாக கூறினார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், போஸ், ரஞ்சித் மோகன், முகமது ரஸ்வி, சலீம் பாதுஷா, மந்திர மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்ட ஜீ தோகு காய்-சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
- அதில் 8 மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் மற்றும் 8 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 13 மாணவர்கள் வெண்கல பதக்கங்கள் மற்றும் 12 மாணவ,மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
சேலம்:
சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் மாவட்ட ஜீ தோகு காய்-சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதில் சப்-ஜூனியர் மற்றும் கேடட் ஜூனியர் கட்டா பிரிவில் 41 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதில் 8 மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் மற்றும் 8 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 13 மாணவர்கள் வெண்கல பதக்கங்கள் மற்றும் 12 மாணவ,மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜீ தோ காய் கராத்தே சங்கத்தின் இந்திய தலைவர் தியாகராஜன் மற்றும் இந்திய பொதுச்செயலாளர் முத்துராஜு (உலக கராத்தே நடுவர்) மற்றும் சேலம் மாவட்ட ஜீ தோகு காய்- சிவாலயா ஸ்போர்ட்ஸ் கராத்தே இயக்குனர் சதீஷ்குமார் ராஜி மற்றும் பயிற்சியாளர் சரவணன் வாழ்த்து தெரிவித்தனர்.
- தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
- 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பல்லடம் :
பல்லடத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்றனர்.இதுகுறித்து கராத்தே பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்,கோஜிரியோ கராத்தே அமைப்பின் சார்பில், தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது.இந்தப் போட்டிகளில் தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டா,குமிட்டோ,உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 8 தங்கப்பதக்கம்,10 வெள்ளிப்பதக்கம், 16 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கன்சன் இந்தியா ட்ரஸ்ட் மேலாளர் சதிஷ்குமார், கராத்தே பயிற்சியாளர் சரவணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய ஒசாக சிடோ-ரயூ கராத்தேபயிற்சி பள்ளி உள்ளது.
- 3 நாட்கள் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இந்திய ஒசாக சிடோ-ரயூ கராத்தேபயிற்சி பள்ளி உள்ளது. இங்கு பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே சாம்பியன்ஷிப்-2022 போட்டி நடந்தது.
3 நாட்கள் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சி நுட்ப இயக்குனர் மூர்த்தி தலைமை தாங்கினார். கராத்தே நுட்ப பயிற்று விப்பாளர் சுந்தர்ராஜன், உதவி பயிற்றுவிட்பாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு கலந்து கொண்டு வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
- கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே ஓபன் போட்டிகள் நடைபெற்றது.
- போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
திண்டுக்கல்:
கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே ஓபன் போட்டிகள் நடைபெற்றது. தமிழகம், பாண்டிச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த வர்ஷினி, ஜூலியானாேஜான்ஸ், ஸ்ரீலயா, நாகபிரபா ஆகிய மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர் ராஜகோபால் பரிசு வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கோபிநாத், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.