search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிப்ட் டீ கல்லூரியில் கராத்தே போட்டி
    X

    நிப்ட் டீ கல்லூரியில் கராத்தே போட்டி

    • ஹிரோஷிஹா கராத்தே ‘சாம்பியன் ஷிப்’ -2022 போட்டி நடைபெற்றது.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள 'நிப்ட் டீ' கல்லூரியில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஹிரோஷிஹா கராத்தே 'சாம்பியன் ஷிப்' -2022 போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்–சூர் கபடி சங்க பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம் போட்டிகளை தொடங்கி வைத்தார். நிப்ட் டீ கல்லூரி நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மேலாளர் சிவகுமார் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் மாவட்டததில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட 2-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஹிரோஷி ஹா கராத்தே சாம்பியன்ஷிப் 2022 ஓவர் ஆல் போட்டியில் முதல் இடத்தை காங்கயம் விவேகானந்தா அகாடமி பள்ளியும், 2-ம் இடத்தை அவினாசி நாச்சம்மாள் வித்தியாவாணி பள்ளி அணியும், 3-ம் இடத்தை திருப்பூர் ஏ.வி.பி.டிரஸ்ட் பள்ளியும் பிடித்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை வாரியர்ஸ் கராத்தே அகாடமி ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    Next Story
    ×