search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய அளவிலான கராத்தே போட்டி- சாம்பவர்வடகரை அகாடமி மாணவர்கள் சாதனை
    X

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.

    தேசிய அளவிலான கராத்தே போட்டி- சாம்பவர்வடகரை அகாடமி மாணவர்கள் சாதனை

    • தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதல், 2 மற்றும் 3-ம் பரிசை கைப்பற்றினர்.
    • கராத்தே சிறப்பு பயிற்சியாளர் ஜெயச்சந்திரன் முதல் பரிசை வென்றார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை சிப்புகான் சிட்டோரியா கராத்தே அகாடமியில் இருந்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 7 மாணவர்கள் ஒரு கராத்தே பயிற்சியாளர் லியோ கோஜோரியோ அகாடமி சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதல், 2 மற்றும் 3-ம் பரிசை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

    இதில் தென்காசி கராத்தே சிறப்பு பயிற்சியாளர் ஜெயச்சந்திரன் முதல் பரிசை வென்றார். தனிநபர் பிரிவில் சக்தி முதல் பரிசும், காசிமணி மற்றும் கபிலன் ஆகியோர் 2-ம் பரிசும், சந்துரு, சுடலை பாபுஜி, மகேந்திர சுமித், பெஞ்சமின் கிரிஸ் ஆகியோர் 3-ம் பரிசும் வென்றனர். தென்காசி மாவட்ட தலைமை பயிற்சியாளர் ஜெயச்சந்திரன், தொழில்நுட்ப இயக்குனர் ராஜ் மகேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டினர். இதில் வெற்றி பெற்றவர்கள் உடுமலைபேட்டையில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    Next Story
    ×