search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
    X

    மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

    • காளையார்கோவிலில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிராமத்தில் கியோசி இஷின்ரியூ கராத்தே கோபுடோ அசோசியேஷன் சங்க கூட்ட அமைப்புகள் நடத்தும் மாவட்ட அளவி லான சிறப்பு கராத்தே பயிற்சி மற்றும் போட்டிகள் தனியார் மகாலில் கராத்தே மாஸ்டர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இந்த போட்டியினை சிவகங்கை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். கராத்தே சிறப்பு பயிற்சியாளர் சண்முகவேல், அகில இந்திய கராத்தே சங்க கூட்ட மைப்பு தலைவர் நாக ராஜன், கேரளாவைச் சேர்ந்த டெக்னிசியன் மற்றும் திருநெல்வேலி மாஸ்டர் மணி, தாயிசி மாஸ்டர் கணேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

    இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாவட்டத்தில் இருந்து 17-க்கு மேற்பட்ட பள்ளி களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்லக்கண்ணன், நவநீதன், மாவட்ட பாசறை இணை செயலாளர் சதீஷ், கண்ண தாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்துராஜா, பூமி, அம்மா பேரவை செல்ல சாமி, தே.மு.தி.க. சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர்.

    Next Story
    ×