உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 1 மணி நிலவரப்படி 35.34 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2022-02-19 09:19 GMT   |   Update On 2022-02-19 09:19 GMT
சென்னை மாநகராட்சி தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீத வாக்குகள் பதிவானது.
சென்னை:


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் மொத்தம் 2 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர். 

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35.34 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சிகளில் 28.50 சதவீதமும், நகராட்சிகளில் 41.13 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. 

பேரூராட்சி பகுதிகளில் 46.92 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Tags:    

Similar News