உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி குடிப்பதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏர்வாடி:
களக்காட்டை அடுத்த திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலி தொழிலாளி. இவரது மனைவி காவியா(வயது 19).
இசக்கிமுத்துவிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். மேலும் அடிக்கடி அவரது மனைவியுடனும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் காவியா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்றும் இசக்கிமுத்து குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால், விரக்தி அடைந்த காவியா நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
உடனே அவரை மீட்டு ஏர்வாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவியாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது. இதனால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.