உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தடுப்பூசி விபரங்களை கட்டுப்பாட்டு மையத்தில் பெறலாம்- கலெக்டர் தகவல்

Published On 2022-01-26 10:01 GMT   |   Update On 2022-01-26 10:01 GMT
கொரோனா பரிசோதனை முடிவுகள், தடுப்பூசி விபரங்கள், வீட்டுத்தனிமை, மருத்துவவசதி உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு மையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தென்காசி மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று பரவிவருவதால் கொரோனா  ட்டுப்பாட்டு மையம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கொரோனா பற்றிய விளக்கங்கள், பரிசோதனை முடிவு, வீட்டுத்தனிமை, மருத்துவவசதி, தடுப்பூசிகள் பற்றிய விபரங்களைஅறிந்து கொள்ள கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 04633-290548 மற்றும் அலைபேசி எண் 9443621240 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News