உள்ளூர் செய்திகள்
குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை
நிழற்குடை சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அவரப்பாளையம், மற்றும் அருகிலுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும் குடிமகன்கள் அங்கே அமர்ந்து மதுபானங்கள் அருந்திவிட்டு பாட்டில்கள், தம்ளர்கள் உள்ளிட்டவைகளை அங்கே போட்டுச் செல்கின்றனர்.
இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.