search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் நிழற்குடை"

    • வள்ளியம்மாள் புரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார்.
    • விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.

    கடையம்:

    கடையம் யூனியன் மடத்தூர் ஊராட்சி க்கு உட்பட்ட வள்ளியம்மாள் புரத்தில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார். அதன் திறப்பு விழா நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.

    இதில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாநில போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை, ஐந்தாம் கட்டளை பஞ்சா யத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி, பொ ட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், மடத்தூர் பஞ்சா யத்து துணை தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
    • சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள மலை கிராம பகுதி யான திங்களூர் பஞ்சாயத்து 8 கிராமங்களை உள்ளடக்கியது.

    இதில் தொட்டிகாடட்டி செல்லும் மக்களு க்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. பல வருடமாக இருக்கும் இந்த நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    பெய்த கனமழையால் மேற்கூரைகள் பெய்து எப்பொழுது வேண்டு மானாலும் இடியும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த நிழற்குடையில் நிற்கும் பயணிகள் ஒருவித அச்சத்து டன் நின்று வருகின்றனர்.

    இது பற்றி திங்களூர் ஊராட்சி யில் பலமுறை கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

    மேலும் கிராம சபை கூட்டத்திலும் இந்த நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்த னர்.

    பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்து பெரிய அசம்பா விதம் ஏற்படுவதற்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நெடுஞ்சாலைப் பணிக்காக இடிக்கப்பட்டது
    • பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையொட்டி காவேரிப்பாக்கம் பேரூராட்சி அமைந்துள்ளது.

    இப்பகுதியில் இருந்து சென்னை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புத்தூர், ஓசூர், பெங்களூர், சித்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல காவேரிப்பாக்கம், அத்திப்பட்டு, திருப்பாற்கடல், ராமாபுரம், கடப்பேரி, கட்டளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், முதியோர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பஸ் நிலையத்திற்கு வருகின்றனர்.

    இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பகுதியில் மக்கள் கூட்டம் பரப்பரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்ப டவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த பகுதி முக்கிய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் சந்திப்பாக இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து நிழற்குடையை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட் பட்ட பாட்டிக்குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் கோபால், நகராட்சி துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு பயணிகள் நிழற் குடையை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டை திறந்து வைத் தும், குத்துவிளக்கு ஏற்றினார்.

    தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், காங் கிரஸ் மாவட்ட செயலாளர் கல்பனா, வழக்கறிஞர் தனசேக ரன், மாவட்ட பிரதிநிதி ஷாஷிக்குமார், நகராட்சி பொறியா ளர் ஆசிர்வாதம், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
    • மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதில் பொரு த்தப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து வருவதுடன் நிழற்குடையை சுற்றிலும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில்;-

    பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொது மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நிழற்குடை போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. மேலும் நிழற்குடையைச் சுற்றிலும் புதர்மண்டி உள்ளதுடன் இருக்கைகளும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சூழலில் நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதை சாதகமாக கொண்டு மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு காத்திருக்க வேண்டி உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படும் சூழலும் நிலவு கிறது.

    பராமரிப்பு இல்லாமல் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்தும் அதன் முன்பாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்று வதற்கும் அதிகாரிகள் முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேலூர் அருகே பயணிகள் நிழற்குடை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியம் வண்ணாம்பாறைபட்டி ஊராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    இதில் மேலூர் யூனியன் தலைவர் பொன்னுசாமி, வண்ணாம்பாறைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி மகாராஜன், துணைத் தலைவர் சின்ன கருப்பு, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், யூனியன் பொறியாளர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், உறங்கான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெள்ளலூர் இளங்கண்ணன், கோட்டநத்தம்பட்டி கந்தப்பன், கிடாரிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.20 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலசப்பாக்கம் தாலுக்கா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் கலசப்பாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தி.சரவணன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க கூறினார்.

    அப்போது கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், பி.டி.ஓ. சத்தியமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார் நகர செயலாளர் சவுந்தர்ராஜன் ஒன்றிய கவுன்சிலர் செண்பகவல்லி ஊராட்சி மன்ற தலைவர் வித்யாபிரசன்னா உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் சாலையில் ஒன்றிய குழு உறுப்பினரின் 2013-2014-ம் ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றினர்.
    • மழை, வெயில் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றத்தால் பயணிகள் நிழற்குடை இல்லாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம்-திருநின்றவூர், திருவள்ளூர்-செங்குன்றம் ஆகிய ஊர்களுக்கு செல்லலாம். இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நான்கு சாலைகள் சந்திக்கும் கூட்டுச்சாலையில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வந்து செல்வார்கள்.

    இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் மிகப்பெரிய லாரிகள் வந்து செல்ல இந்த நான்கு வழிச்சாலை சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைப்பதாக கூறி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    அப்பொழுது திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் சாலையில் ஒன்றிய குழு உறுப்பினரின் 2013-2014-ம் ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றினர்.

    சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் மீண்டும் அது அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் அப்போது உறுதி கூறப்பட்டது. ஆனால், அந்த நிழற்குடையை சாலை ஓரம் குப்பை தொட்டியில் போட்டு வைத்துள்ளனர். இதனால் மழை, வெயில் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றத்தால் பயணிகள் நிழற்குடை இல்லாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை போர்க்கால அடிப்படையில் அங்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு உயர் நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவைகளும் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பிக்கட்டி. இதை சுற்றிலும் முள்ளிகூர், கெரப்பாடு, ஒசட்டி, பாரதியார்புதுார், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பிக்கட்டி பகுதிக்கு சென்று அங்கிருந்து அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களில் நகர பகுதிக்கு சென்று வர வேண்டும்.

    இது தவிர கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு உயர் நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவைகளும் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது. பிக்கட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை ஒட்டி பஸ் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார்துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அரசு பஸ்கள் வரும் வரை மேற்படி நிழற்குடையில் காத்திருப்பார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தது. இதை தொடர்ந்து பழுதடைந்த மேற்கூரை இடித்து அகற்றப்பட்டது.

    இந்நிலையில் மேற்கூரை அகற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது.

    மழை நேரங்களில் பஸ்கள் வரும் வரை நனைந்தபடியே சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் நலன் கருதி உடனடியாக நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நரிக்குடி அருகே கலையரங்கம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இந்திராநகர், கணையமறித்தான் மற்றும் கட்டனூர் ஆகிய பகுதிகளில் ரூ.18 லட்சம் மதிப்பில், கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டி ற்காக திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கமலி பாரதி, பாப்பா போஸ், தங்க தமிழ்வாணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி கல்லூரி பஸ் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனர்.
    • மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரமானது கோவையில் இருந்து சக்தி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர்,பொதுமக்கள் என தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த சாைலயில் பயணிக்கின்றனர்.

    மேலும் ஒரு நாளைக்கு கோவை-சக்தி ேராட்டில் தனியார் பஸ், அரசு பஸ் மற்றும் பள்ளி கல்லூரி பஸ் என சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கணேசபுரத்தில் அமைந்து உள்ள பயணியகள் நிழற்குடை குப்பை கிடங்காகவும், வாகனம் நிறுத்தும் இடமாகவும், குடிமகன்கள் உறங்கும் இடமாகவும் மாறி உள்ளது.

    மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது. இந்த நிழற்குடையானது 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய நிழற்குடை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக இந்த நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி புதிய நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் கட்டித் தரவேண்டும். நிழற்குடையில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றி, அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • வாலிப்பாறை சாலை ஓரமாக வண்டியூர் கிராமத்திற்கான பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
    • நிழற்குடையை மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே வாலிப்பாறை சாலை ஓரமாக வண்டியூர் கிராமத்திற்கான பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை கட்டப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் நிழற்குடையை சுற்றிலும் மரம், செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் சிலர் நிழற்குடையை மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிலர் பகல் நேரங்களிலேயே மது அருந்திவிட்டு போதையில் நிழற்குடைக்குள் படுத்து தூங்குகின்றனர்.

    இதுபோன்ற நேரங்களில் பெண்கள் நிழற்குடை அமைந்துள்ள பகுதியில் நிற்க அச்சமடைகின்றனர். மேலும் நிழற்குடை அமைந்துள்ள பகுதியில் இருந்து சிறிது தூரம் தள்ளி வெயிலில் காத்திருந்து பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

    சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல போலீசார் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டு நிழற்குடையில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×