search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti social activities"

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.

    குனியமுத்தூர்

    கோவை சுந்தராபுரம் எஸ்.பி.டவர் பின்புறம் செங்கப்ப கோனார் லே-அவுட் அமைந்துள்ளது.

    இந்த பகுதியையொட்டிய செங்கப்ப கோனார் தோட்டம் மற்றும் விநாயகர் கோவில் அமைந்துள்ள பகுதியில் தெருவிளக்கு வசதி கிடையாது.

    இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எதிரில் நிற்பர் யார் என்று கூட கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு கடும் இருள் நிலவுகிறது.

    கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாததால் நள்ளிரவில் விநாயகர் கோவில் முன்பு 2,3 பேர் நின்று கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கத்தி உள்ளிட்ட பயரங்கள் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என நினைத்து மக்கள் சென்று அவர்களிடம் எதுவும் கேட்பதில்லை.

    காலையில் பார்த்தால் அந்த பகுதி முழுவதும் காலி பாட்டில்களாக கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் பதற்றாகவே காட்சியளிக்கிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இப்பகுதி முழுவதும் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் சமூக விரோதிகள் அதனை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.அப்பகுதி முழுவதும் பிரகாசமான வெளிச்சம் இருந்தால் அப்பகுதியில் யாரும் நிற்க மாட்டார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்விளக்கு இல்லாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள பரதநாட்டிய பள்ளியில் சிலைகள் திருட்டு போனது. மேலும் வழிப்பறி சம்பவமும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி முழுவதும் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வாலிப்பாறை சாலை ஓரமாக வண்டியூர் கிராமத்திற்கான பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
    • நிழற்குடையை மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே வாலிப்பாறை சாலை ஓரமாக வண்டியூர் கிராமத்திற்கான பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை கட்டப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் நிழற்குடையை சுற்றிலும் மரம், செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் சிலர் நிழற்குடையை மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிலர் பகல் நேரங்களிலேயே மது அருந்திவிட்டு போதையில் நிழற்குடைக்குள் படுத்து தூங்குகின்றனர்.

    இதுபோன்ற நேரங்களில் பெண்கள் நிழற்குடை அமைந்துள்ள பகுதியில் நிற்க அச்சமடைகின்றனர். மேலும் நிழற்குடை அமைந்துள்ள பகுதியில் இருந்து சிறிது தூரம் தள்ளி வெயிலில் காத்திருந்து பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

    சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல போலீசார் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டு நிழற்குடையில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×