உள்ளூர் செய்திகள்
பெருநாழியில் செயல்படாமல் உள்ள பி.எஸ்.என்.எல், தொலை தொடர்பு உயர் கோபுரம்.

கமுதி அருகே செயல்படாத செல்போன் டவர்

Published On 2022-01-08 10:20 GMT   |   Update On 2022-01-08 10:20 GMT
கமுதி அருகே செல்போன் டவர் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில்  ஊரின் மையப் பகுதியில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு உயர் கோபுரம் உள்ளது. 

இதன்மூலம் பெருநாழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அரசு அலு வலகங்கள்,  பள்ளிகள், ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கங்களில் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் இணைப்பு மூலம் பயனடைந்து வந்தனர். 

கடந்த 2 மாதங்களாக பெருநாழி பி.எஸ்.என்.எல். உயர் கோபுரம் செயல் படாததால் இ-சேவை மையம், ரேஷன் கடைகள், தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் அரசு அலுவலகங்களில் நெட்வொர்க் இணைப்பு கிடைக்காமல், பொதுமக்களுக்கு  தேவையான சான்றிதழ்கள், விண் ணப்பங்களை பதிவிறக்கம், பதிவேற்றம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். 

இதனால் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கமுதிக்கும், 25 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாயல்குடிக்கும் பொதுமக்கள் செல்ல வேண் டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து மாவட்ட பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை என பெருநாழி பொதுமக்கள் கூறுகின்றனர். 

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெருநாழியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு உயர் கோபுரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News