search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் பாதிப்பு"

    • தசை பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மற்ற மாவட்டங்களில் 30-க்கும் குறைவானவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் தற்போது வரலாறு காணாத வகையில் அனல் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது கோடை மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடில்லை. கர்நாடகாவில் குடகு மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் உக்கிரம் தாண்டவமாடி வருகிறது.

    இதனால் தற்போது பகல் நேரங்களில் வேட்பாளர்கள் பிரசாரத்தையே ரத்து செய்து விட்டனர். கொளுத்தும் வெப்பம் காரணமாக வட கர்நாடகாவில் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தசை பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாகல் கோட் மற்றும் சித்ரதுர்காவில் தலா 50 பேர் வெப்ப பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் கலபுரகியல் 39 பேரும், ராய்ச்சூரில் 38 பேரும், யாத்கிரியில் 35 பேரும், பெல்காம் பகுதியில் 32 பேரும் தட்சிண கன்னடாவில் 32 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 30-க்கும் குறைவானவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனல் காற்று வீசுவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து உஷ்ண பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி தண்ணீர் குடியுங்கள், வெப்பநிலை அதிகரிப்பால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பல்வேறு உடல்நல குறைபாடுகள் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    • வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காட்டில் 2 நாட்களாக கொட்டி தீர்த்த வரலாறு காணாத மழையினால் ஆறு கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.

    தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் களக்காடு ஆற்றாங்கரை தெரு, மூங்கிலடி, கீழப்பத்தை, மேலப்பத்தை, கலுங்கடி, பத்மநேரி, புலியூர்கு றிச்சி, மாவடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

    முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் நாசமானது.

    வீடுகளை இழந்த பொது மக்கள் அந்தந்த ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இடிந்து விழுந்ததால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வீடு களை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, அரவேணு, அருவங்காடு, பர்லியார், காந்தல், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் வேறு வழியின்றி, மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிளாஸ்டிக் கவரினை அணிந்தபடி தேயிலை பறிப்பில் ஈடுபட்டனர். மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் பெரும்பாலானவா்கள் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்தவாறு வெளியில் நடமாடினர். வேன் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே வாகனத்தை இயக்கி சென்றனர்.

    கோத்தகிரியில் 9 மி.மீட்டர் மழையும், கொடநாட்டில் 2 மி.மீ, கீழ்கோத்தகிரியில் 69 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்றும் வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வெயில் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவியது.

    இன்று காலை முதல் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

    வால்பாறையில் நேற்று இரவு நேரத்தில் வால்பாறை, அக்காமலை, பச்சமலை, நடுமலை, கருமலை, கவர்கள், சோலையார் அணை, முடீஷ் போன்ற எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தோட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி சின்கோனாவில் 31 மில்லி மீட்டர் மழையும்,சின்னக்கல்லார் 16 மில்லிமீட்டர் மழையும், வால்பாறையில் 19 மில்லி மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

    மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்தது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர். குடைபிடித்தபடி அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • கடந்த ஒரு வாரமாக காலை, மாலை, இரவு நேரங்களில், தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • மின்தடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி துணை மின் நிலையத்தில் இருந்து தடப்பெரும்பாக்கம், பொன்னேரி, உத்தண்டி கண்டிகை, வேம்பாக்கம், அனுப்பம்பட்டு, எலவம்பேடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காலை, மாலை, இரவு நேரங்களில், தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மிக்சி, கிரைண்டர், மின்மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாததால் தினமும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரத்திலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் புழுக்கத்தால் தூங்க முடியாமல் வயதானவர்களும், நோயாளிகளும் கஷ்டப்பட்டு வருகின்றனர். தினமும் காற்றுக்காக வீட்டின் மொட்டைமாடியில் தூங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின்தடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, பொன்னேரியை சுற்றி உள்ள சுமார் 50 கிராமங்களில் தினந்தோறும் அறிவிக்கப்படாத மின்தடை உள்ளது. இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் மின் தடை ஏற்படுகிறது என்றனர்.

    • குமாரபாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
    • அவற்றை பிடிக்க பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் நாய்கள் தொந்தரவு அதிகம் இருப்பதால், சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒவ்வொரு நகராட்சி கூட்டங்களிலும் அனைத்து கவுன்சிலர்களும் புகார் கூறி வருகின்றனர்.

    பிரதான சாலைகளான சேலம் சாலை, பள்ளிபா ளையம் சாலை, இடைப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், வயதானவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள், விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட பணிகளுக்கு செல்வோர் உள்ளிட்ட பலர் இந்த நாய்க ளால் பெறும் அவஸ்தைக்கும், அச்சத்திற்கும் ஆளாகி வருகிறார்கள்.

    சில நேரங்களில் சாலையில் செல்வோரை நாய்கள் துரத்துவதோடு கடித்தும் விடுகின்றன. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • போலீஸ் துறை அதிகாரி களின் அலட்சியத்தால் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட கேமராக்கள் வீணாக கிடைக்கின்றது.
    • விபத்து, மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் திணறி வருகி ன்றனர்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில், ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில், 63 சி.சி.டி.வி., கேமராக்கள், ஊத்தங்கரை நகர் பகுதியில் உள்ள முக்கிய, சாலை, கோவில், மற்றும் பாம்பாறு அணை, காரப்பட்டு, வீரியம்பட்டி, மேலும் எல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டது.

    இதனால் ஊத்தங்கரை பகுதியில் நடைபெறும், பல்வேறு திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து உடனடியாக அறிந்துகொண்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக, ஊத்தங்கரை நகர் பகுதியில் உள்ள 63 கேமராக்களில், தற்பொழுது 6 கேமராக்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

    மற்ற கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதாகி கிடக்கின்றது. இதனால், பல்வேறு திருட்டு, கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் நட மாட்டம் அதிகரித்துள்ளது.

    பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் பள்ளி, வணிகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து 27 லட்சம் ரூபாய் மதிப்பில், அமைத்துக் கொடுத்த சி.சி.டி.வி., கேமராக்களை, போலீஸ்துறையினர் பராமரிப்பின்றி விட்டுள்ள சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

    விபத்து, மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

    போலீஸ் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட கேமராக்கள் வீணாக கிடைக்கின்றது.

    பயனற்று கிடக்கும் கேமராக்களை சரி செய்து, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    இது குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் சாலை யை விட்டு கீழே இறங்கி பள்ளத்தில் சிக்கியது.
    • வந்தபின் பார்ப்போம் அல்லது வந்தால் பார்ப்போம் என்பது சமீபகால ஆட்சியா ளர்களின் செயல்பாடாக உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பட்டா ம்பாக்கத்தில் எதிரெதிரே வந்த பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராள மானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நாளில் நெல்லிக்குப்பத்தில் டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்கு ள்ளானது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் சாலை யை விட்டு கீழே இறங்கி பள்ளத்தில் சிக்கியது. இந்நிலையில் நேற்று நெல்லிக்குப்பத்தில் இருந்து வந்த தனியார் பஸ்சின் கியர் ராடு உடைந்து பஸ் தாறுமாறாக ஓடியது. நேருக்கு நேர் பஸ்கள் மோதிய விபத்தை தவிர்த்து மற்றவைகளில் உயிரிழப்பு ஏதும் இல்லை.

    இந்த பஸ்கள் விபத்துக்கு ள்ளானதற்கு பஸ்சில் பணி செய்பவர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல. பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தபடும் பஸ், லாரி போன்ற வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை எப்.சி. எடுக்கப்படுகிறது. அதாவது, இந்த வாகனங்கள் பொது மக்களை ஏற்றிச் செல்வதற்கு உகந்தது என போக்குவரத்து அதிகாரிகள் சான்று அளிக்கின்றனர். அதன் பின்னரே இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும், தனியார் பஸ்களில் திடீரென டயர் வெடிக்கிறது. கியர் ராடு உடைகிறது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழக்கிறது. இதில் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

    ஹெவி லைசன்ஸ் இல்லாதவர்கள் பஸ் போன்ற கனரக வாகனங்களை இயக்குவது, செலவினங்களை குறைக்க தரமற்ற அல்லது பழைய பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கப்பட்ட உதிரி பாகங்களை பஸ்சுக்கு பயன்படுத்துவது, ஒரிஜினல் டயரை வாங்காமல், பழைய டயர்களை வாங்கி ரீ டிரேட் செய்து பஸ்களுக்கு பொறுத்துவது போன்றவைகளே இது போன்ற விபத்துக்களுக்கு காரணமாகும். இதனை கண்காணிக்கும் பொறுப்பு போக்குவரத்து துறைக்கு உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமீபத்தில் கடலூர் போக்குவரத்து துறையில் நடைபெற்ற கூட்டத்தில், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி பேசிய வீடியோ சமூக வலைத ளங்களில் வைரலாக பரவியது. பொதுமக்கள் எளிதில் அணுகமுடியாத துறையாக போக்குவரத்து துறை உள்ளது. புரோக்க ர்கள் இல்லாமல் இங்கு எந்த பணியும் நடப்பதில்லை.

    லஞ்சம் வாங்குவதற்கு பதிலாக பிச்சை எடுத்து வாழலாம் என்றும், கடலூர் மாவட்டத்தில் லஞ்ச ஓழிப்பு துறைக்கு வரும் புகார்களில் அதிகளவில் போக்குவரத்து துறையை பற்றிதான் புகார்கள் வருகின்றன என்று பேசினார். இந்நிலையில்தான் கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் தொடர் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனை கண்காணிக்கும் பொறுப்பி லிருந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏன் விலகுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் முன் காப்போம் என்பது ஆன்றோர் சொல். வந்தபின் பார்ப்போம் அல்லது வந்தால் பார்ப்போம் என்பது சமீபகால ஆட்சியா ளர்களின் செயல்பாடாக உள்ளது. ஒரு சம்பவம் நடந்த பிறகு அதைச் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்தவகையில் கூட தனியார் பஸ்களின் தொடர் விபத்து தொடர்பாக எந்த நடவடிக்கையையும், மாவட்ட நிர்வாகமும், போ க்குவரத்து துறையினரும் எடுக்க வில்லை என்பதே நிதர்ச னமான உண்மையாகும்.

    • சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன.
    • மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட த்தில், கடற்கரைச் சாலை மற்றும் அதனை சுற்றியு ள்ள போக்குவரத்து மிக்க முக்கிய சாலைகள் அனைத்தும் கால்நடைகள் உலா வும் சாலைகளாக மாறி வருகின்றன. மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன. இத னால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதற்கு காரைக்கால் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை வேறு இடத்திற்கு அப்புறபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரைக்காலில் மாடுகளை சாலையில் திரியவிடக்கூடாது மீறினால், மாடுகள் பறிமுதல் செய்ய ப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர். ஆனாலும் மாடுக ளை சாலைகளில் விடுவது இன்னும் அரங்கேறி வருகி றது. இதனால் அவைகளை சாலையில் சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடு க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.

    • திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது.
    • ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது. இதனால் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுபோன்று திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் மின்வினியோகம் வழங்கப்படுவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைகிறது. இது தொடர்பாக மின்வாரி யதுறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டால் சரியான தகவல் தெரிவிப்பதில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 மணி நேரம் தொடர்ந்து மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

    • முட்புதர்கள் அதிகளவு தேக்கம் அடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது.
    • நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ரங்கநாதன் லே-அவுட்டு பகுதியில் அரசு கல்லூரிக்கு செல்லும் வழியில் ரங்கநாதன் லே-அவுட் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்ம் அருகில் தற்பொழுது முட்புதர்கள் அதிகளவு தேக்கம் அடைந்து புதர் மண்டி காணப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் மற்றும் பகல் நேரங்களில் விஷசந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.
    • திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட இடம்.

    வீரபாண்டி :

    திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை வழியாக பொங்கலூர் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன தணிக்கை செய்யும் இடத்திற்கு போகும் இடத்தில் குப்பை கொட்டியுள்ளார்கள்.இந்த இடம் திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்டது. குப்பையை எடுத்து 1மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் பொழுது மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் பலவகையான கழிவுகளை கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் வருகின்றன.

    இந்த தெரு நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்கள் தினந்தோறும் ஏற்படுகிறது . இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் குப்பையை உடனடியாக அகற்றியும் குப்பைத் தொட்டியை வேறு இடத்தில் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது.
    • பாலம் உடைந்ததால் மாறங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி ைபயூர் வழியாக செல்கின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கர்நாட காவிலும் இந்த மழை பெய்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணைக்கட்டு வேகமாக நிரம்பியது. இதன் காரணமாக அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த உபரி நீர் திருவெண்ணெய்நல்லூர் வழியாக மாறங்கியூரில் உள்ள கோரை ஆறு தரைப் பாலம் வழியாக வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இந்த வெள்ள பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால் கோரை ஆறு தரைப்பாலம் உடைந்து சேதமானது. இந்த பாலம் உடைந்ததால் மாறங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி ைபயூர் வழியாக செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் காலையிலே சம்பவ இடத்திற்கு சென்று உடைந்த பாலத்தை பார்வையிட்டார். மேலும் உடைந்த பாலம் குறித்தும் அதனை சீர் செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பொது மக்கள் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டாம் என பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். 

    ×