search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public damage"

    • திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது.
    • ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது. இதனால் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுபோன்று திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் மின்வினியோகம் வழங்கப்படுவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைகிறது. இது தொடர்பாக மின்வாரி யதுறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டால் சரியான தகவல் தெரிவிப்பதில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 மணி நேரம் தொடர்ந்து மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

    • கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது.
    • பாலம் உடைந்ததால் மாறங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி ைபயூர் வழியாக செல்கின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கர்நாட காவிலும் இந்த மழை பெய்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவில் பெய்த மழையினால் ஓசூர் வழியாக திருவண்ணாமலை, சாத்தனூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணைக்கட்டு வேகமாக நிரம்பியது. இதன் காரணமாக அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த உபரி நீர் திருவெண்ணெய்நல்லூர் வழியாக மாறங்கியூரில் உள்ள கோரை ஆறு தரைப் பாலம் வழியாக வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இந்த வெள்ள பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரால் கோரை ஆறு தரைப்பாலம் உடைந்து சேதமானது. இந்த பாலம் உடைந்ததால் மாறங்கியூர் பகுதிக்கு செல்வதற்கு பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி ைபயூர் வழியாக செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் காலையிலே சம்பவ இடத்திற்கு சென்று உடைந்த பாலத்தை பார்வையிட்டார். மேலும் உடைந்த பாலம் குறித்தும் அதனை சீர் செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பொது மக்கள் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டாம் என பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். 

    ×