search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி அருகே 50 கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு
    X

    பொன்னேரி அருகே 50 கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு

    • கடந்த ஒரு வாரமாக காலை, மாலை, இரவு நேரங்களில், தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • மின்தடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி துணை மின் நிலையத்தில் இருந்து தடப்பெரும்பாக்கம், பொன்னேரி, உத்தண்டி கண்டிகை, வேம்பாக்கம், அனுப்பம்பட்டு, எலவம்பேடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காலை, மாலை, இரவு நேரங்களில், தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மிக்சி, கிரைண்டர், மின்மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாததால் தினமும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரத்திலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் புழுக்கத்தால் தூங்க முடியாமல் வயதானவர்களும், நோயாளிகளும் கஷ்டப்பட்டு வருகின்றனர். தினமும் காற்றுக்காக வீட்டின் மொட்டைமாடியில் தூங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின்தடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, பொன்னேரியை சுற்றி உள்ள சுமார் 50 கிராமங்களில் தினந்தோறும் அறிவிக்கப்படாத மின்தடை உள்ளது. இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் மின் தடை ஏற்படுகிறது என்றனர்.

    Next Story
    ×