உள்ளூர் செய்திகள்
சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் - பெண் உட்பட 2 பேர் கைது
சென்னை சாலி கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போரூர்:
சென்னை., சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ்க்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடப்பது உறுதியானது.
இதையடுத்து அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்த முத்துலட்சுமி, அல்போன்ஸ் ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்டு மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.