செய்திகள்
கோப்புபடம்

குன்னத்தூர் அருகே நிலப்பிரச்சினையில் 3 பேர் மீது வழக்கு

Published On 2021-10-16 09:57 GMT   |   Update On 2021-10-16 09:57 GMT
பழனிச்சாமி குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் குன்னத்தூர் போலீசார் 3 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
குன்னத்தூர்:

குன்னத்தூர் அருகே சின்னியம்பாளையம் ஊராட்சி மயிலம் பாளையத்தில் பழனிசாமிக்கு சொந்தமான 3 ஏக்கர் 10 சென்ட்  நிலம் உள்ளது. இதேபோல் இவரது உறவினர்களான பன்னீர்செல்வம், வேலுச்சாமி, குமார் ஆகியோருக்கு 3 ஏக்கர் 10 நிலம் இருந்தது. ‌ 

பன்னீர்செல்வம், வேலுச்சாமி, குமார் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான  நிலத்தை கடந்த 1985ம் ஆண்டு வேறு நபருக்கு விற்று விட்டார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டு பன்னீர்செல்வம், வேலுச்சாமி, குமார் ஆகியோர் பழனிசாமிக்கு சொந்தமான நிலத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என தகராறு செய்துள்ளனர்.

பழனிச்சாமி இது பற்றி குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் குன்னத்தூர் போலீசார் 3 நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதையடுத்து பழனிசாமி இது பற்றி ஊத்துகுளி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி மேற்படி பன்னீர்செல்வம், வேலுச்சாமி, குமார் மீது வழக்கு பதிவு செய்ய குன்னத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுபடி குன்னத்தூர் போலீசார் பன்னீர்செல்வம், வேலுசாமி, குமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News