செய்திகள்
விபத்து

மினிலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2021-09-11 10:39 GMT   |   Update On 2021-09-11 10:39 GMT
மதுக்கூர் அருகே மினிலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர்:

மதுக்கூர் அடுத்த மூத்தாக்குறிச்சியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 66) விவசாயி. இவர் மதுக்கூர்- அதிராம்பட்டினம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுக்கூர் அடுத்த காசாங்காடு நால் ரோட்டில் சென்றபோது நின்று கொண்டிருந்த மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பக்கிரிசாமி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பக்கிரிசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவருடைய தம்பி ராஜேந்திரன் மதுக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News