செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1949 பேருக்கு கொரோனா

Published On 2021-08-04 14:24 GMT   |   Update On 2021-08-04 14:24 GMT
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,67,401 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.  நேற்று பாதிப்பு 1,908 ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்று 1,949 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,67,401 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,011 ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 38 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கண்டறிய  1 லட்சத்து 56 ஆயிரத்து 635 மாதிரிகள் உள்ளன.  சென்னையில் இன்று 189 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை உள்ளவர்கள் எண்ணிக்கை 20,117 ஆக உள்ளது. 
Tags:    

Similar News