உள்ளூர் செய்திகள்

வாழப்பாடியில் 744 கிலோ குட்கா போதைப்பொருள் பறிமுதல்

Published On 2024-05-08 03:50 GMT   |   Update On 2024-05-08 03:50 GMT
  • வாடகைவீட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
  • பூசாரிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

வாழப்பாடி:

வாழப்பாடியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் உத்தரவின் பேரில், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையிலான போலீசார், நேற்று மாலை வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, கிழக்குக்காடு சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே செல்வராஜ் என்பவர் குடியிருந்து வரும் வாடகைவீட்டில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 68 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள 744 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.

இதையடுத்து பூசாரிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News