தமிழ்நாடு செய்திகள்

அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது- திண்டுக்கல் சீனிவாசன்

Published On 2026-02-15 13:28 IST   |   Update On 2026-02-15 13:28:00 IST
  • சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
  • தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு அவர் விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேபோல் செங்கோட்டையனும் அரசியலுக்காக பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் இருந்த போது தனிப்பட்ட முறையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்தார். தற்போது அவர் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நயினார் நாகேந்திரன் குறித்தும் பேசி வருகிறார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் சென்றால் வள்ளலார் ஆட்சி என்பார். தூத்துக்குடி சென்றால் வ.உ.சி. ஆட்சி என்பார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.

தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது. தனது சொந்த செல்வாக்கில் ஜெயிக்க வேண்டும். மேலும் 30 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகிறார். ஆனால் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அவர்கள் தி.மு.க.வில் எதுவும் அறுவடை செய்ய முடியுமா என்பதற்காக அங்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News